/* */

நெல்லையில் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருநெல்வேலி மாவட்டத்திற்கு பங்குனி உத்திரத் திருநாள் முன்னிட்டு 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறையாக ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நெல்லையில் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை
X

பைல் படம்.

பங்குனி உத்திர திருநாள் (பங்குனி 4) 18.03.2022 வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேற்படி 18.03.2022 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument ACT-1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 26.03.2022 கடைசி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On: 14 March 2022 10:54 AM GMT

Related News