Begin typing your search above and press return to search.
மாநகராட்சி சார்பில் நரிக்குறவர்களுக்கு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு
நரிக்குறவர்கள் மக்களிடையே எம்ஜிஆர் வேடமிட்டு கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டது.
HIGHLIGHTS
நெல்லையை அடுத்த பேட்டை ரயில்வேகேட் அருகில் நரிக்குறவர்கள் காலனி உள்ளது. இங்கு சுமார் 300 நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள நரிக்குறவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மற்றும் அதன் அவசியம் குறித்தும், நெல்லை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ராயல் டூவிண்சிட்டி ரோட்டரி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நரிக்குறவர்களுக்கு மிகவும் பிடித்த தலைவர் எம்ஜிஆர்ரின் வேடமிட்டு நரிக்குறவர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
இதில், மாநகராட்சி மக்கள் நல அலுவலர் சரோஜா, ஆளுநர் ராயல் முத்தையா டூவிண்சிட்டி தலைவர், அருணகிரி முருகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.