Begin typing your search above and press return to search.
பஸ் கட்டண உயர்வு மக்களை பாதிக்கும்- நெல்லையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
பஸ் கட்டண உயர்வு மக்களை பாதிக்கும் என நெல்லையில் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில் கூறினார்.
HIGHLIGHTS
நெல்லை மாவட்டம் தேவர்குளத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பையா பாண்டியன் இல்ல திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சர்கள் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேட்டியில்
மக்களை பாதிக்காத வகையில் பஸ் கட்டண உயர்வு இருக்கும் என அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பஸ் கட்டண உயர்வு என்றாலே மக்களுக்கு பாதிப்பு தான் வரும். மக்களை பாதிக்காத கட்டண உயர்வு என்பது எப்போதும் போல் அண்டப்புளுகு என தெரிவித்தார்.