/* */

நெல்லை அருகே சாெத்து பிரச்சனையில் தந்தை மீது தாக்குதல்: மகன் கைது

கோடகநல்லூரில் சொத்து பிரச்சனை காரணமாக தந்தையை அவதூறாக பேசி அடித்து மிரட்டல் விடுத்த மகனை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நெல்லை அருகே சாெத்து பிரச்சனையில் தந்தை மீது தாக்குதல்: மகன் கைது
X

சொத்து பிரச்சனை காரணமாக தந்தையை அவதூறாக பேசி அடித்து மிரட்டல் விடுத்த மகன் கைது.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோடகநல்லூர் குடிபடை தெருவை சேர்ந்த அய்யாகுட்டி என்ற தம்பு (85) என்பவருக்கும், அவருடைய இரண்டாவது மகன் நல்லபெருமாள் என்ற உச்சிமாளி(55) என்பவருக்கும் வீடு சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதை மனதில் வைத்துக் கொண்டு நல்லபெருமாள் என்ற உச்சிமாளி என்பவரும், அவரது மகள் மாரியம்மாளும் அய்யாகுட்டி என்ற தம்பு என்பவரின் வீட்டிற்கு முன்பு வைத்து அவரை அவதூறாக பேசி கையால் அடித்து மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சுத்தமல்லி காவல் நிலையத்தில் அய்யாகுட்டி புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் முத்துராஜ் விசாரணை மேற்கொண்டு அய்யாகுட்டி என்ற தம்புவை அவதூறாக பேசி கையால் அடித்து மிரட்டல் விடுத்த நல்லபெருமாள் என்ற உச்சிமாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Updated On: 26 Oct 2021 1:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை