/* */

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 12 திட்டப்பணிகள்: முதல்வர் திறந்து வைப்பு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிவடைந்த 12 திட்டப்பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 12 திட்டப்பணிகள்: முதல்வர் திறந்து வைப்பு
X

புதிய பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் விஷ்ணு, எம்எல்ஏ அப்துல்வகாப், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டு நவீன படுத்தப்பட்ட நெல்லை புதிய பேருந்து நிலையம் மற்றும் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் உள்ளிட்ட 110 கோடி ரூபாய் மதிப்பிலான 12 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

நெல்லை மாநகரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் நடந்து வருகிறது. நெல்லை வேய்ந்தான் குளம் அருகே 4 நடைமேடைகள் உடன் அமைந்திருந்த புதிய பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு கூடுதலாக இரண்டு நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. தரை தளம், முதல் தளம் என வணிக வளாகம் போன்று கடைகளும் கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே 131 கடைகள் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 65 கடைகள் பெரிய அரங்குகள் , பேருந்து வருகை புறப்பாடு ஆகியவைகளை அறிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் வடிவ பிரம்மாண்ட திரைகள், மாணவர்கள் அறிவியல் திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில் அறிவியல் பூங்கா என 50 கோடி ரூபாய் மதிப்பி்ல் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்று பாளையங்கோட்டை பேருந்து நிலைய பழைய கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு அங்கு புதிதாக 13.08 கோடியில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகில் 6.75 கோடி மதிப்பில் 3 தளங்களுடன் கூடிய இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இவை உள்பட 110.19 கோடி மதிப்பில் முடிவடைந்த 12 திட்டப்பணிகளை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். தொடர்ந்து பேருந்து இயக்கம் தொடங்கப்பட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் அனைவரும் பேருந்து நிலைய பகுதி, அறிவியல் பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Dec 2021 7:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...