/* */

நெல்லை:அம்பாசமுத்திரம் தாமிரபரணிஆற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கடையநல்லூரைச் சேர்ந்த இளைஞர் ஜாஹிர் ஹூசைன் (35) உயிரிழந்தார்.

HIGHLIGHTS

நெல்லை:அம்பாசமுத்திரம் தாமிரபரணிஆற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி
X

அம்பை தாமிரபரணியில் மூழ்கிய இளைஞர் பலி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர், அல்லி மூப்பன் தெருவைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா மகன் ஜாஹிர் ஹூசைன் (35). இவர் கத்தாரில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன் விடுமுறையில் கடையநல்லூருக்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் நண்பர்களுடன் அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்தார். அம்பாசமுத்திரம் சின்ன சங்கரன் கோவில் அருகே உள்ள அணைக்கட்டுப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார், உடனிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் காப்பாற்ற முடியவில்லை.

உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் தீயணைப்பு மீட்பு வீரர்கள் வந்து நீரில் மூழ்கிய ஜாஹிர் ஹூசைன் உடலை உயிரற்ற நிலையில் மீட்டனர். இதையடுத்து அம்பாசமுத்திரம் போலீசார் ஜாஹிர் ஹூசைன் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அம்பாசமுத்திரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 15 July 2021 12:53 AM GMT

Related News

Latest News

  1. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  2. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  3. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  4. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  6. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  7. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  9. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்