Begin typing your search above and press return to search.
ஆக்சிஜன் சீர் படுத்தும் கருவிகள் -ஆட்சியரிடம் வழங்கிய டிவிஎஸ் குழுமம்
நெல்லை மாவட்டம் -
HIGHLIGHTS
100 ஆக்சிஜன் சீர் படுத்தும் கருவிகள் - நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய டிவிஎஸ் குழுமம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரானா பேரிடரை தடுக்க உதவி செய்ய அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என தமிழக முதல்வர் அழைப்பு விடுத்த நிலையில்.. பல்வேறு தொழில் நிறுவனங்கள், நடிகர்கள், தன்னார்வல அமைப்புகள், பொதுமக்கள் தங்கள் உதவி கரங்களை நீட்ட தொடங்கியுள்ளனர்
இந்நிலையில் டிவிஎஸ் குழுமத்தின் சார்பாக நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு அவர்களை சந்தித்து ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான 100 சீர்படுத்தும் கருவிகளை கொரோனா தடுப்பு சிகிச்சைக்காக மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியது