சாலையோர ஆதரவற்ற மக்களை பாதுகாக்க பள்ளியில் சிறப்பு முகாம்.
ஆதரவற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு
HIGHLIGHTS
சாலையோர ஆதரவற்ற மக்களை பாதுகாக்க கல்லணை பள்ளியில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.இதனை ஆதரவற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கின் போது பெரும் தொற்று நோயில் இருந்து பாதுகாக்க திருநெல்வேலி மாநகர பகுதியில் சாலையோரங்களில் உள்ள அனைத்து மக்களை மீட்டு உணவு உட்பட அடிப்படை தேவைகள் கிடைக்கும் வகையில் டவுண் கல்லணை பள்ளியில் தங்க வைக்கும் பணி துவங்கியது.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் கண்ணன் உத்தரவின்படி திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் இல்ல பாதுகாவலர் சோயா சரவணன்குகுழுவினர் நெல்லை மாநகர பகுதியில் உள்ள ஆதரவற்றவர்கள் இருக்கும் இடங்களை தேடி சென்று வாகனங்கள் மூலம் அவர்களை மீட்டு வந்து.ஆதரவற்றவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து அவர்களை முழுவதுமாக சுத்தப்படுத்தி தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்
மேலும் சாலையோர ஆதரவற்ற மக்கள் இம் முகாமை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர். கடந்த முழு ஊரடங்கும் போது ஒரு மாதமாக இப்பள்ளியில் ஆதரவற்றவர்கள் மற்றும் வெளியூரிலிருந்து வந்து செல்ல முடியாதவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இங்கு தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.