Begin typing your search above and press return to search.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், விவசாயிகளின் பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது தொடர்பான சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலர் கரிசல் சுரேஷ், தெற்கு மாவட்ட செயலர் சுந்தர் ஆகியோர் தலைமை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.