/* */

பொதுமக்களுக்கு போலி மருத்துவ சிகிச்சை அளித்து வந்த பெண் கைது

கூடன்குளத்தில் பொதுமக்களுக்கு போலி மருத்துவ சிகிச்சை அளித்து வந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

பொதுமக்களுக்கு போலி மருத்துவ சிகிச்சை அளித்து வந்த பெண் கைது
X

 வசந்த குமாரி.

நெல்லை மாவட்டம், கூடங்குளம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு போலியாக மருத்துவ அளித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கூடங்குளம் பகுதியில் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில் கூடங்குளம் பகுதியில் வீ.கே மெடிக்கல் என்ற பெயரில் நடத்திவரும் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள வட்டவிளையை சேர்ந்த வசந்தகுமாரி(42) என்பவர் அப்பகுதி மக்களுக்கு எந்த வித அரசு அனுமதி பெறாமல் மருந்தகத்தின் உள்ளே பொது மக்களுக்கு ஊசி போட்டு வந்துள்ளார்.

ஏற்கனவே கடந்த வருடமும் இதே போன்று சம்பவத்தில் ஈடுபட்டு கைதான நிலையில் மீண்டும் இது போன்று போலியான மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததுள்ளார்.

கூடங்குளம் காவல்துறையினருக்கு இதுக்கு குறித்து தகவல் வந்ததை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் வசந்தகுமாரி முறையான மருத்துவம் பயிலாமல் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஜான்பிரிட்டோ, மருத்துவம் பார்த்து வந்த வசந்த குமாரி மீது வழக்கு பதிவு செய்து வசந்தகுமாரியை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Updated On: 28 April 2022 2:14 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  2. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  3. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  4. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  5. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  6. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  7. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  8. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  9. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  10. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...