/* */

திருநெல்வேலி மாவட்டம் : தாலுகா காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர் களுக்கு யோகா பயிற்சி

காக்கிச்சட்டை அணியும் போதே நிதானமும், சகிப்புத்தன்மையும் வந்துவிட வேண்டும். குற்றவாளியாக இருந்தாலும் அவர்களிடம் சட்டரீதியாக அணுகவேண்டும்.உணர்ச்சி வசப்பட்டு எந்த செயலிலும் இறங்க கூடாது- எஸ்பி. மணிவண்ணன் அறிவுரை

HIGHLIGHTS


திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாலுகா காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கான யோகா பயிற்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

யோகா பயிற்சி முகாமுக்கு தலைமை வகித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பேசியதாவது:

காக்கிச்சட்டை அணியும் போதே நிதானமும், சகிப்புத்தன்மையும் வந்துவிட வேண்டும். பிரச்னைக்காக செல்லுமிடத்தில் குற்றவாளியாக இருந்தாலும் அவர்களிடம் நீங்கள் சட்டரீதியாக அணுகுங்கள். நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு எந்த செயலிலும் இறங்க கூடாது. காவல்துறை என்பது கட்டுப்பாடான குடும்பம், அதன் கட்டுப்பாட்டை குலைக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது.

இதனால் மன உளைச்சல், குடும்பத்தில் பிரச்னை, வேலையில் பொறுப்பின்மை இவையெல்லாம் ஏற்படலாம். நீங்கள் கூடாநட்பை தவிர்ப்பது நல்லது. இந்த வேலைக்கு ஒவ்வொருவரும் மிகவும் கஷ்டப்பட்டு வந்திருப்போம். எத்தனையோ பேருக்கு கிடைக்காத இந்த வாய்ப்பை கடவுள் நமக்கு கொடுத்துள்ளார். அதனால் இந்த வேலையை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வெளியில், பொறியியல் படிப்பு படித்தவர்கள், மாதம் இருபதாயிரம் ரூபாய் ஊதியத்துக்காக வேலை தேடி கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் உங்களுக்கு கிடைத்துள்ள இந்தப்பணிக்காக தங்குவதற்கு வீடு உள்பட பல்வேறு சலுகைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளது. பணிக்கு செல்லும் இடத்தில் செல்போனை அதிகம் பயன்படுத்துவதால் அருகில் என்ன நடந்தாலும் அதனை கவனிக்கும் எண்ணம் குறைந்து போய்கொண்டிருக்கிறது.

எனவே செல்போன் பயன்பாட்டைக் குறைத்துகொள்வது உங்களுக்கும் பதவிக்கும் நல்லது. வேலை மீதான ஈடுபாட்டை அதிகரித்து கொள்ளுங்கள். காவல்துறையினர் அனைவருமே கிடைக்கும் நேரத்தில் நன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள். கிடைக்கும் போதெல்லாம் நன்றாக உறங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் அவர். இப்பயிற்சியில் 200 -க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 10 July 2021 8:34 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  2. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  3. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  4. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  5. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு: ஆட்சியர்...
  6. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  9. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  10. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!