/* */

திருச்சி அகதிகள் முகாம்கள் அமைச்சர் மஸ்தான் ஆய்வு

திருச்சி வாழவந்தான் கோட்டை மற்றும் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைசிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் திருச்சியில் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

திருச்சி அகதிகள் முகாம்கள்  அமைச்சர் மஸ்தான் ஆய்வு
X

திருச்சி அகதிகள் முகாமில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார். அருகில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பங்கேற்றனர்.


திருச்சி வாழவந்தான் கோட்டை மற்றும் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைசிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் திருச்சியில் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கை அகதிகள் முகாமில் உள்ள வீடுகள், கழிப்பிடங்கள் உள்ளிட்டவற்றை அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார். இதன்பின்னர் அங்கு தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு கொரோனா நிவாரண உதவியாக ரூ.4,000 நிதிஉதவியை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து திருச்சி புதுக்கோட்டை சாலை கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார் அங்கு மக்களிடம் குறைகளை அவர் கேட்டறிந்தார்.

இந் நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநிலங்கள் உறுப்பினர் திருச்சி சிவா, மாவட்ட கலெக்டர் சிவராசு, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத் ஆகியோர் உடன் இருந்தனர்.




Updated On: 30 Jun 2021 3:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...