/* */

துறையூரில் 25-ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி மாவட்டம் துறையூரில் 25-ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

துறையூரில்  25-ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X

பைல் படம்.

திருச்சி மாவட்டத்தில் எரிவாயு நுகவோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி தலைமையில் துறையூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டமானது திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 25.06.2022-ஆம் தேதி சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் துறையூர் வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகர்வோர்கள் தங்களது குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இக்குறை தீர்க்கும் கூட்டத்தில் துறையூர் வட்டத்திற்கு உட்பட்ட நுகர்வோர்கள், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர்அமைப்புகள் மற்றும் நுகர்வோர் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான குறைபாடுகளை தெரிவித்து பொதுமக்கள் பயனடையுமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 21 Jun 2022 6:19 AM GMT

Related News