/* */

திருவாரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை

திருவாரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

திருவாரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை
X
கொள்ளை நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன.

திருவாரூர் அருகே புலிவலம் தெற்கு வீதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் பெருந்துறை பகுதியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி.தமிழ்ச்செல்வியின் தந்தை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இதற்காக நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு சென்ற நிலையில் தமிழ்ச்செல்வி வீட்டிற்கு வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 20 பவுன் தங்கம் ரூ 25,000 ரொக்கப் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது .

இதனை தொடர்ந்து திருவாரூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிவான விரல் ரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்த போது புலிவலம் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக உள்ள நிலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் மேலும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டில் படுத்து இருந்த பெண்ணிடம் கழுத்தில் இருந்த 4 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவமும் நடைபெற்றுள்ளது எனவே உடனடியாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து பொருட்களை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 26 Sep 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  2. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  3. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  5. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  6. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  8. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  10. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி