திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் இறப்பில் மர்மம் என புகார்
திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியை கணவர் அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
HIGHLIGHTS
திருவாரூர் அருகே உள்ள ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம்- வனிதா தம்பதியினருக்கு பிரியதர்ஷினி, பிரவீன் ,பிரதீபா ஆகிய 3 பிள்ளைகள் உண்டு. இந்த நிலையில் ராமலிங்கம் மற்றும் வனிதா இருவரும் உயிரிழந்த நிலையில் மூன்று பிள்ளைகளும் பாட்டி வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர் .கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரியதர்ஷினி திருவிக கல்லூரியில் படித்தபோது மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்போன் டவர் சர்வீஸ் வேலை செய்து வரும் கேசவமூர்த்தி என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு சிவரஞ்சன் என்கிற ஒன்றரை வயது மகன் உள்ளார் .
இந்த நிலையில் நேற்று பிரியதர்ஷினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பிரியதர்ஷியின் உடலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனர். அதில் பிரியதர்ஷினி உடலில் அடித்துக் கொலை செய்யப்பட்டதற்கான காயங்கள் இருந்துள்ளது.
இதனையடுத்து திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உறவினர்கள் தெரிவித்த போது பிரியதர்ஷினி கணவர் குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதும் இதன் தொடர்ச்சியாக தற்போது அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பெயரில் புகார் அளித்துள்ளோம் உடனடியாக உரிய முறையில் விசாரணை நடத்தி கேசவமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என்றனர்.
இதன் அடிப்படையில் முதல் கட்டமாக போலீசார் காதல் கணவர் கேசவமூர்த்தியை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.