Begin typing your search above and press return to search.
திருவாரூரில் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம்
திருவாரூர் மாவட்டத்தில் இன்று பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் பயிரிடப்பட்டு இருந்தது. தற்பொழுது 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட நெற் பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் இன்று பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். மேலும் இதற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.