/* */

திருவாரூரில் 1,072 பேருக்கு அமைச்சர் சக்கரபாணி நலத்திட்ட உதவி

திருவாரூர் மாவட்டத்தில் 1,072 நபர்களுக்கு சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்

HIGHLIGHTS

திருவாரூரில் 1,072  பேருக்கு அமைச்சர் சக்கரபாணி நலத்திட்ட உதவி
X

திருவாரூரில் அமைச்சர் சக்கரபாணி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள 1072 பயனாளிகளுக்கு தலா சுமார் 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவாரூர் தனியார் திருமண மண்டபத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கல்வி உதவி தொகை, வங்கி கடன் மானியம், திருமண உதவித் தொகைக்கான ஆணைகள், தையல் இயந்திரம், சலவை இயந்திரம், வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் 1072 நபர்களுக்கு ஒரு கோடியே 98 லட்சத்து 56 ஆயிரத்து 290 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். நலத்திட்ட உதவிகள் வழங்கிய தமிழக முதல்வருக்கு கல்லூரி மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன்,மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, முன்னாள் அமைச்சர் மதிவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Updated On: 5 Dec 2021 2:55 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...