திருவாரூரில் முழு ஊரடங்கு : பொதுமக்கள் வணிகர்கள் ஒத்துழைப்பு
திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஒட்டி போக்குவரத்து இன்றி பிரதான சாலைகள் வெறிச்சோடியது . அரசு விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் முழு ஒத்துழைப்பு.
கொரோனா இரண்டாம் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள், ஏடிஎம் தவிர அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து சாலைகளும் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடைத்தெரு பகுதிகளில் வாகனம் மூலம் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14, 305 கடந்துள்ளது. மாவட்டம் முழுவதும் 928 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.