/* */

திருவாரூரில் முழு ஊரடங்கு : பொதுமக்கள் வணிகர்கள் ஒத்துழைப்பு

திருவாரூரில் முழு ஊரடங்கு : பொதுமக்கள் வணிகர்கள் ஒத்துழைப்பு
X

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஒட்டி போக்குவரத்து இன்றி பிரதான சாலைகள் வெறிச்சோடியது . அரசு விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் முழு ஒத்துழைப்பு.

கொரோனா இரண்டாம் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள், ஏடிஎம் தவிர அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து சாலைகளும் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடைத்தெரு பகுதிகளில் வாகனம் மூலம் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14, 305 கடந்துள்ளது. மாவட்டம் முழுவதும் 928 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 25 April 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு