Begin typing your search above and press return to search.
திருவாரூரில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகர் பகுதிகளில் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் இருப்பது காவல்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கள்ள ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட்ட விஸ்வபாரதி, ராஜா, தமிழ்வாணன், அருள் ,ஈஸ்வரன் என ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
மேலும் திருத்துறைபூண்டி தாலுகாவில் தொடர்ந்து சாராயம் காய்ச்சி விற்று வந்த வெற்றிவேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மீது திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. மேலும் இதுபோல் தவறுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரித்துள்ளார்.