Begin typing your search above and press return to search.
திருவாரூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு: ஆட்சியர் பங்கேற்பு
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஆட்சியர் காயத்ரி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
HIGHLIGHTS
திருவாரூர் விளமல் தனியார் அரங்கில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது
இதில் 100கர்பிணி பெண்களுக்கு 18வகையான சீர்வரிசை பொருட்களை ஆட்சியர் காயத்ரி மற்றும் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் இருவரும் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் தேவா சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை திட்ட அலுவலர் கார்த்திகா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.