/* */

திருவாரூரில் சமரச தீர்ப்பு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

திருவாரூரில் சமரச தீர்வு நாளை முன்னிட்டு மாவட்ட நீதி துறை சார்பாக சமரச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

HIGHLIGHTS

திருவாரூரில் சமரச தீர்ப்பு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
X

 மாவட்ட முதன்மை நீதிபதி சாந்தி தலைமையில் நடைபெற்ற சமரச விழிப்புணர்வு பேரணி

சமரச விழிப்புணர்வு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருவாரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து நகராட்சி அலுவலகம் வரை சமரச விழிப்புணர்வு பேரணி மாவட்ட முதன்மை நீதிபதி சாந்தி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சமரச தீர்வு நாள் மற்றும் தீர்வு வாரம் குறித்த விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. ஏப்ரல் 6 தேதி முதல் 13-ஆம் தேதி வரை சமரச வார விழா கொண்டாடப்படுவதை ஒட்டி வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி வைத்து வழக்குகளை விரைந்து முடித்து கொள்ளலாம் என இந்த பேரணியை மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

இப்பேரணியில் மாவட்ட தலைமை நீதிபதி சாந்தி, தலைமை குற்றவியல் நீதிபதி பாலமுருகன், சார்பு நீதிபதி வீரணன், உரிமையியல் நீதிபதி ஹரி ராமகிருஷ்ணன், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 April 2022 2:43 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்