/* */

கடனாக மது வழங்க மறுத்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது தாக்குதல்

திருத்துறைப்பூண்டி அருகே டாஸ்மாக் மதுபானக் கடையில் கடனாக மது வழங்க மறுத்த ஊழியர்களை மர்ம நபர்கள் தாக்கினர்.

HIGHLIGHTS

கடனாக மது வழங்க மறுத்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது தாக்குதல்
X
டாஸ்மாக் கடையில் மது பான பாட்டில்கள் உடைந்து கிடந்தன.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மாங்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையில் மாலையில் 5 பேர் கொண்ட கும்பல் கடனாக மது கேட்டு ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். கடனாக தர முடியாது என கூறிய ஊழியர்கள் சூரியமூர்த்தி, ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் 5 பேர் கொண்ட கும்பல் கடையில் இருந்த மதுபாட்டில்களை சேதப்படுத்தியோடு, ஊழியர்கள் இருவரையும் மதுபாட்டில்களை உடைத்து குத்தியதில் ஊழியர் சூரியமூர்த்திக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Updated On: 16 March 2022 10:44 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...