/* */

டிராக்டரை ஓட்டி பயில முயன்ற 15 வயது சிறுவன் உடல் நசுங்கி பலி

திருத்துறைப்பூண்டி அருகே டிராக்டரை ஓட்டி பயில முயன்ற 15 வயது சிறுவன் டிராக்டருடன் கவிழ்ந்து உடல் நசுங்கி பலியானான்.

HIGHLIGHTS

டிராக்டரை ஓட்டி பயில முயன்ற 15 வயது சிறுவன்  உடல் நசுங்கி பலி
X

பலியான சிறுவன் சசிகுமார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆண்டங்கரை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சதீஷ். இவரது மகன் சசிகுமார் 15 வயதான இவன் பாமணி கிராமத்தில் உள்ள தனது மாமா வீட்டிற்கு பள்ளி விடுமுறைக்காக சென்றிருந்தான். அப்போது வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை ஓட்டி பழக முயற்சித்துள்ளான். இதில் டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த தெற்கு பாமணி வடிகால் வாய்க்காலில் கவிழ்ந்து உள்ளது. இதில் சிறுவன் சசிகுமார் மீது டிராக்டர் கவிழ்ந்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

உடனடியாக இச்சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்து. அதன் பேரில் சிறுவனின் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்தசம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 28 Jan 2022 3:50 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்