/* */

முத்துப்பேட்டையில் காரில் கடத்தி வரப்பட்ட 82 கிலோ கஞ்சா பறிமுதல்

முத்துப்பேட்டையில் காரில் கடத்தி வரப்பட்ட 82 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

முத்துப்பேட்டையில் காரில் கடத்தி வரப்பட்ட 82 கிலோ கஞ்சா பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை ஈ.சி.ஆர். சாலையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், எஸ்.ஐ பிரபு மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி வந்த காரை சோதனை செய்த போது 82 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

கடத்தலில் ஈடுபட்ட சோழன்குடிக்காடு பகுதியை சேர்ந்த ராஜா (43), ஜாம்புவானோடை பகுதியை சேர்ந்த வீரகணேசன் (28) , செந்தில்நாதன் (29), பிரபாகரன் (32) , கீழவாடியக்காடு பகுதியை சேர்ந்த மகேஷ் (38) உள்ளிட்ட 5 பேரை முத்துப்பேட்டை போலீசார் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 82 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 Feb 2022 7:01 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...