Begin typing your search above and press return to search.
திருவாரூரில் உலக நன்மை கொரோனா தொற்று நீங்க வேண்டியும் பிரார்த்தனை
150 வருடபழமை வாய்ந்த புனிதசூசையப்பர் ஆலயத்தில் புத்தாண்டினை முன்னிட்டு கூட்டு திருப்பலி நடைபெற்றது
HIGHLIGHTS
உலகம் முழுதும் 2022-ஆம் ஆண்டினை வரவேற்கும் விதமாக புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே பெரும்பண்னையூரில் உள்ள ஐரோப்பிய கட்டிடக் கலையின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள 150 வருடங்கள் பழமையான, பிரம்மாண்டமான புனித சூசையப்பர் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு கூட்டுதிருப்பலி நடைபெற்றது. இதில் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். உலக நன்மை வேண்டியும் கொரோனா போன்ற தொற்று நீங்க வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.