/* */

குடவாசல் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை

குடவாசல் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து கொள்ளை.. செயின், டி.வி, சிலிண்டர் கொள்ளையடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

குடவாசல் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை
X

கொள்ளை நடந்த வீட்டின் உள்புற தோற்றம்.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, அரசவனங்காடு பகுதியில் உள்ள அக்ரஹாரத்தில் ஸ்ரீதரன் அவரது சகோதரர் முத்துசுவாமி வீடுகள் உள்ளன. முத்துசுவாமி கடந்த 10 நாட்களுக்கு முன் காசிக்கு யாத்திரை சென்றுள்ளார்.

இந்த நிலையில்.. நேற்று காசியில் இருந்து திரும்பி வந்த முத்துசுவாமி, வீட்டின் மதில்சுவர் கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வாசல் நிலைக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் வீட்டின் உள்ளே உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த உத்திராட்சையுடன் கூடிய தங்க சங்கிலி திருடப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலிருந்த பெரிய எல். இ.டி. டிவியும், புதிய சமையல் எரிவாயு சிலிண்டரும் திருட்டு போயுள்ளன.

இதுகுறித்து குடவாசல் காவல் நிலையத்திற்கு தெரியப் படுத்தியவுடன் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 3 March 2022 1:24 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்