/* */

நன்னிலம் அருகே தனியார் கல்லூரி பேருந்தை திருடிய 4 பேர் கைது

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தனியார் கல்லூரி பேருந்தை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நன்னிலம் அருகே தனியார் கல்லூரி பேருந்தை திருடிய 4  பேர் கைது
X

தனியார் கல்லூரி பேருந்தை திருடியதாக கைது செய்யப்பட்டவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் உள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், பாப்பாகோவில் பகுதியிலுளள தனியார் கல்லூரி பேருந்து, திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே மணவாளம்பேட்டை பகுதியில் நிறுத்தப்பட்டிருப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் மாலையில் நிறுத்தி விட்டு, மறுநாள் காலையில் பேருந்தை எடுத்து மாணவர்களை கல்லூரிக்கு அழைத்து செல்வது உண்டு.

இந்நிலையில், எப்போதும் போல கல்லூரி பேருந்தை ஓட்டுநர் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். காலை வந்து பேருந்து ஓட்டுனர் பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை காணாமல் பதறி உள்ளார்.

இதுகுறித்து, நன்னிலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சுகுணாவிடம் பேருந்து காணவில்லை என புகார் கொடுத்தார். இந்த நிலையில்.திருச்சிக்கும் கரூருக்கும் இடையே திருப்பராய்த்துறை பகுதியில் உள்ள சுங்க சாவடி அருகே பேருந்தை ரோந்து காவல்துறையினர் மடக்கி பிடித்ததாக நன்னிலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தததிருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருக்கண்ணபுரத்தில் உள்ள முருகதாஸ் மகன் சத்திய ஸ்ரீராம் என்பவர் திருப்பூரில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.அவர் கொரோனாதொற்று காரணமாக வீட்டில் இருந்துள்ளார். அவரது கூட்டாளியான திருப்பூரைச் சேர்ந்த சிவகுமார், அஷ்ரப், சதீஷ்குமார் ஆகியோர் சத்திய ஸ்ரீராம் வீட்டிற்கு வந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் 4பேரும் சேர்ந்து மணவாளம்பேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் கல்லூரி பேருந்தை திருடிக்கொண்டு திருப்பூரை நோக்கி சென்றுள்ளனர். இடையில் திருப்பராய்த்துறையில் ரோந்து காவல்துறையினரை பார்த்ததும் பேருந்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்

இதை அடுத்து திருப்பூர் சென்ற தனிப்படையினர் சத்திய ஸ்ரீராம்,சிவக்குமார், அஸ்ரப், சதீஷ்குமார் ஆகிய 4பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 30 Sep 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  5. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  6. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  7. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  8. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  9. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  10. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...