/* */

குழாய் உடைப்பால் எண்டப்புளி கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

குடிநீர் குழாய் உடைப்பால், தேனி மாவட்டம், எண்டப்புளி கிராமத்தில் 25 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

HIGHLIGHTS

குழாய் உடைப்பால் எண்டப்புளி கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
X

எண்டப்புளி கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாய் பெரியகுளம் தண்டுபாலத்தை கடக்கும் இடத்தில் உடைந்துள்ளது. தற்காலிகமாக சீரமைத்தாலும், குடிநீர் வீணாகிறது.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து குழாய் மூலம் எண்டப்புளி கிராமத்திற்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு மேல்நிலை தொட்டிகளில் ஏற்றப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. இந்த குடிநீர் குழாய் பெரியகுளம் தண்டுபாலத்தின் மீது பதித்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த இடத்தில் குழாய் உடைந்துள்ளது.

தற்போது தற்காலிகமாக ரப்பர் சுற்றி வைத்துள்ளனர். ஆனாலும் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. கடந்த 25 நாட்களுக்கும் மேலாக இந்த இடத்தில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் கிராம மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் சப்ளை செய்ய முடியவில்லை. மக்கள் குடிநீருக்கு சிரமப்பட்டு வருகின்றனர். தேவைக்கு ஏற்ப குடிநீர் இருக்கும் நிலையிலும், நிர்வாக குளறுபடிகளால் நீர் வெளியேறி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Updated On: 10 Jan 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’