/* */

ஊட்டி, கொடைக்கானலை மிஞ்சிய தேனி மாவட்டம்

தேனி மாவட்டத்தின் பருவநிலை, ஊட்டி, கொடைக்கானலை விட சிறப்பாக உள்ளது. அனுபவித்தால் தான் புரியும்.

HIGHLIGHTS

ஊட்டி, கொடைக்கானலை  மிஞ்சிய தேனி மாவட்டம்
X

தேனி நகருக்குள் செல்லும் கொட்டகுடி ஆறு. நகருக்குள் ஓடும் நதி போன்றா தெரிகிறது. ஏதோ வனத்திற்குள் ஓடும் நதி போல் உள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சூரிய ஒளியே தென்படாத ஒரு அடர்ந்த மேககூட்டங்களால் உருவான இருட்டு நிலவி வருகிறது. அதாவது வெயில் இல்லை. வெளிச்சமும், இருட்டும் கடந்த ஒரு கலவையான ரம்மியமான பருவநிலை. அதற்கு மெருகூட்டும் வகையில், லேசாக பெய்து கொண்டே இருக்கும் சாரல் மழை. எங்கு திரும்பினாலும் நிறைந்து காணப்படும் பச்சை பசேல் என்ற பசுமை, 24 மணி நேரமும் வீசும் சில்லென்ற நரம்பினை ஊடுறுவும் குளிர்நிறைந்த ஈரக்காற்று என தேனி மாவட்ட பருவநிலை மிகவும் அற்புதமாக உள்ளது.

குறிப்பாக மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் தேனி மாவட்டமே அமைந்துள்ளதால், எந்த ரோட்டில் பயணித்தாலும், மலையடிவாரத்தில் பயணிக்கும் ஒரு அனுபவமே கிடைக்கும். தவிர சில கி.மீ., பணத்திற்குள் நீர் நிரம்பி ஓடும் ஆறு, ஓடைகள், கண்மாய்களை காண முடியும். குறிப்பாக தேனியில் இருந்து கம்பம் வரை இருபுறமும் உள்ள வயல்களை கிழித்துச் செல்லும் நான்கு வழிச்சாலையில் பயணிக்கும் போது, நம்மை கடந்து செல்லும் இயற்கை அழகினை கண்டு பயணிகள் சொக்கித்தான் போவார்கள்.

தேனி மாவட்ட மக்கள் இப்படி ஒரு அற்புதமான பருவநிலையினை அனுபவிப்பதால், இவர்கள் எந்த ஒரு மலைப்பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றாலும், எங்கள் ஊரை விட இங்கு அழகாக என்ன இருக்கு என்ற கேள்வியே அவர்கள் மனதில் எழும். காரணம் என்ன தெரியுமா? தமிழகத்தில் முதல் அழகான மாவட்டம், நீலகிரி. இரண்டாவது அழகான மாவட்டம் தேனி. அந்த அழகை அனுபவிக்கும் அற்புத தருணங்கள் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என்ற வடகிழக்கு பருவமழை காலங்கள் தான். தென்மேற்கு பருவமழை காலமும் நன்றாக இருக்கும். ஆனால் வடகிழக்கு பருவமழைக்காலம் தேனி மாவட்டத்தில் சூப்பராக இருக்கும். வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் வந்து இந்த அழகினை அனுபவியுங்களேன்.

Updated On: 21 Dec 2023 6:35 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்