/* */

தங்கை கணவர் கொலை: மனமுடைந்த இளைஞர் தற்கொலை

தேனி மாவட்டம், கம்பம் நகரில் தங்கையின் கணவரை கொன்றதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

தங்கை கணவர் கொலை: மனமுடைந்த இளைஞர் தற்கொலை
X

பைல் படம்.

தேனி மாவட்டம், கம்பம் கிராமச்சாவடி தெருவில் வசிப்பவர் சிவக்குமார், 29 அவரது தம்பி சங்கர் 27. கட்டிடத் தொழிலாளிகளான அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டதில் அண்ணன் சிவகுமாரை அவரது தம்பி சங்கர் கத்தியால் குத்துவதற்கு முயற்சி செய்தார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறை சமாதானம் செய்ய முயற்சி செய்த அவரின் தங்கையின் கணவர் காளிராஜ் 32 மீது கத்திக்குத்து விழுந்தது.

கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் முன் அவர் உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்த சங்கர், தவறுதாக ஆத்திரத்தில் தங்கையின் கணவரை கத்தியால் குத்தி கொன்று விட்டோம் என்று மனம் உடைந்து அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அறிந்த கம்பம் தெற்கு காவல் நிலைய போலிசார் பிரேதத்தை கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 26 July 2022 12:20 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!