Begin typing your search above and press return to search.
தேனி அருகே மனைவியின் கைகளை அரிவாளால் வெட்டிய கணவன் கைது
Crime News Today - தேனி அருகே சுருளிப்பட்டியில் மனைவியின் கைகளை அரிவாளால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
Crime News Today -தேனி மாவட்டம், கம்பம் சுருளிப்பட்டியை சேர்ந்தவர் பழனிமுருகன் (வயது 39.) இவரது மனைவி பவித்ரா( 27. )இவர்களுக்கு கடந்த 2011ல் திருமணம் நடந்தது. ஒன்பது வயதில் பெண் குழந்தையும், நான்கு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.இந்நிலையில் தனது குழந்தைகளை பார்க்க பழனிமுருகன் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் பவித்ரா குழந்தைகளை பார்க்க விடாமல் கணவனை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பழனிமுருகன், அரிவாளால் தன் மனைவியின் இரு கைகளையும் வெட்டினார். பின்னர் ராயப்பன்பட்டி போலீசில் சரணடைந்தார். போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2