Begin typing your search above and press return to search.
கஞ்சா விற்ற இரு வியாபாரிகள் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது
வருஷநாடு மலைப்பகுதி கிராமங்களில் கஞ்சா விற்ற இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
தேனி மாவட்டம், வருஷநாடு எஸ்.ஐ.,அருண்பாண்டியன் மலைப்பகுதி கிராமங்களில் கஞ்சா விற்றதாக பழனிச்சாமி மற்றும் பெருமாள் ஆகியோரை சில நாட்களுக்கு முன்னர் கைது செய்தனர்.
இதற்கு முன்னரும் இவர்கள் மீது பல வழக்குகள் இருந்தன. எனவே இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு, எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார். கலெக்டர் முரளீதரன் இந்த பரிந்துரையினை ஏற்று கஞ்சா வியாபாரிகள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தார்.