/* */

சர்வேத்துறையின் மெத்தனத்தால் ஒரு கோடி ரூபாய் முடக்கம்

தேனி மாவட்ட சர்வே துறையின் மெத்தனத்தால் ஒரு கோடி ரூபாய் பல மாதங்களாக முடங்கி கிடக்கிறது.

HIGHLIGHTS

சர்வேத்துறையின் மெத்தனத்தால் ஒரு கோடி ரூபாய் முடக்கம்
X

ஆண்டிபட்டிஒன்றியம், டி.சுப்புலாபுரம் ஊராட்சி அலுவலகம், குடிநீர் மேல்நிலை தொட்டி, ரேஷன் கடை, ஒருங்கிணைந்த பெண்கள் சுகாதார வளாகம் கட்ட மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. இந்த பணம் வந்து பல மாதங்கள் ஆகி விட்டன. கிராம ஊராட்சி நிர்வாகம், இந்த பணிகளை செய்ய ஐந்து இடங்களை தேர்வு செய்து வைத்துள்ளது. ஆனால் வழக்கம் போல் சர்வேத்துறை போக்கு காட்டி வருகிறது. பல மாதங்களாக ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கேட்டும், இந்த இடங்களை சர்வே செய்து தர சர்வேத்துறை முன்வரவில்லை. இதனால் இதற்கென ஒதுக்கப்பட்ட நிதி முடங்கி கிடக்கிறது. இந்த வசதிகள் இல்லாததால் மக்களின் தவிப்பும் தொடர்கிறது. வழக்கமாக சர்வேத்துறையினரின் மெத்தனத்தால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாவது தவிர்க்க முடியாத அம்சமாக இருந்து வந்தது. இப்போது ஒருபடி மேலே போய், ஊராட்சி நிர்வாகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 March 2022 11:34 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...