Begin typing your search above and press return to search.
தேனிக்குள் நுழைந்தது ஒமிக்ரான்! அறிகுறிகளுடன் ஒருவர் அனுமதி
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒமிக்ரான் அறிகுறிகளுடன் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
HIGHLIGHTS
தேனி மாவட்டம், கம்பம் அருகே புதுப்பட்டியை சேர்ந்த இந்த பெண், குடும்பத்துடன் கோவா சென்று விட்டு தனது கிராமத்திற்கு திரும்பி உள்ளார். அவருக்கு ஒமிக்ரான் தொற்றுக்கான அறிகுறி உள்ளது.
தேனி மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளார். அறிகுறிகள் இருந்தாலும், ஒமிக்ரானை ஆய்வக ரீதியாக உறுதிப்படுத்தும் பணிகளில், தேனி மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் இறங்கி உள்ளது.