/* */

முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழுவின் தமிழக உறுப்பினர் நியமனம்

முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழுவின், தமிழகத்தின் சார்பில் புதிய உறுப்பினராக பொறியாளர் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

முல்லை பெரியாறு அணை மேற்பார்வை  குழுவின் தமிழக உறுப்பினர் நியமனம்
X

முல்லைப்பெரியாறு அணை மேற்பார்வை குழுவின் புதிய உறுப்பினர் சுப்பிரமணியன்.

முல்லைப்பெரியாறு அணை மேற்பார்வை குழுவில் 3 பேர் உள்ள நிலையில், கூடுதலாக 3 பேரை சேர்க்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஏற்கனவே முல்லைப்பெரியாறு அணை மேற்பார்வைக் குழுவின் தலைவராக .குல்சன் ராஜ் மற்றும் தமிழ்நாடு-கேரள அரசின் நீர்வளத்துறைச் செயலாளர்கள் உள்ளனர்.

தமிழகத்தின் உறுப்பினராக பொறியியாளர் ஆர்.சுப்பிரமணியத்தை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. இவர் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நியமனத்தை தமிழக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் வரவேற்று உள்ளனர்.

Updated On: 21 April 2022 2:46 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்