/* */

முல்லை பெரியாறு அணையில் மழையில்லை: 141 அடியாக குறைந்தது நீர் மட்டம்

முல்லை பெரியாறு அணையில் மழை குறைந்ததால், அணைக்கு நீர் வரத்து குறைந்து, நீர் மட்டமும் சரிந்துள்ளது.

HIGHLIGHTS

முல்லை பெரியாறு அணையில் மழையில்லை:  141 அடியாக குறைந்தது நீர் மட்டம்
X

முல்லை பெரியாறு அணை - கோப்பு படம்.

முல்லை பெரியாறு அணையில், ரூல்கர்வ் முறைப்படி இன்னும் ஒரு வாரத்தில், அதாவது நவம்பர் 30ம் தேதி 142 அடி நீர்த்தேக்க வேண்டும். அணையில் கடந்த வாரம் முதலே, நீர் மட்டத்தை 141 அடிக்கு மேல் தினமும் சிறிது, சிறிதாக உயர்த்திக் கொள்ளலாம். ஆனால் முல்லைபெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தெரிந்த தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ரூல்கர்வ் முறைப்படி தண்ணீரை சேமிக்க தெரியவில்லை. அணையில், கடந்த இரண்டு நாட்களாக மழையில்லை. இதனால் நீர் வரத்து விநாடிக்கு 1992 கனஅடியாக குறைந்துள்ளது.

இந்நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 2000ம் கனஅடி நீரை, தமிழகத்திற்கு திறந்து விட்டு வருகின்றனர். வரத்தை விட வெளியேற்றம் அதிகமாக இருந்ததால் 141.20 அடி வரை உயர்ந்த அணையின் நீர்மட்டம், .20 அடி குறைந்து தற்போது 141 அடியாக உள்ளது. நாளை மறுநாள் முதல் மீண்டும் மழை தொடங்கும் வாய்ப்புகள் உள்ளதால், எப்படியும் அணை நீர் மட்டம் 142 அடியை எட்டி விடும் என விவசாயிகள் நம்பிக்கையோடு உள்ளனர்.

Updated On: 22 Nov 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்