/* */

அகில இந்திய காங்கிரஸ் தலைவராகும் மல்லிகார்ஜூன கார்கே:கோஷ்டிபூசல் தீருமா?

Congress President -அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பு ஏற்க உள்ளார்.

HIGHLIGHTS

அகில இந்திய காங்கிரஸ் தலைவராகும்  மல்லிகார்ஜூன கார்கே:கோஷ்டிபூசல் தீருமா?
X

அகில இந்திய காங்., தலைவராக பொறுப்பேற்கும்  மல்லிகார்ஜூன கார்கே.

Congress President -மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக மாநிலம் பீதரில் உள்ள வரவட்டி கிராமத்தில் 1942-ல் பிறந்தார். பீதரில் நடந்த மதக் கலவரத்தால் வீட்டை இழந்த கார்கே, 7 வயதில் குல்பர்காவுக்கு புலம் பெயர்ந்தார். கார்கேவின் தந்தை, அம்பேத்கரின் மப்பண்ணா தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்தார். இதனால் சிறுவயதிலே அம்பேத்கரின் கொள்கைகளை ஏற்ற கார்கே,1956-ல் அம்பேத்கர் பவுத்தம் தழுவிய போது இவரும் குடும்பத்தினருடன் பவுத்தம் தழுவினார்.

குல்பர்கா அரசு கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த இவர், சேத் சங்கர்லால் லஹொட்டி சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பில் இணைந்தார். படிப்பை முடித்த கார்கே, பின்னாளில் உச்சநீதி மன்ற நீதிபதியான சிவராஜ் பாட்டீலிடம் உதவி வழக்கறிஞராக இணைந்தார். குல்பர்கா மாவட்ட நீதிமன்றத்தில் தொழிலாளர் நலன் சார்ந்த வழக்குகளில் திறம்பட வாதாடியதால் கார்கேவுக்கு தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்கு ஏற்பட்டது.

தோல்வியை தழுவாத சர்தார்:

1969-ல் காங்கிரஸில் இணைந்த மல்லிகார்ஜூன கார்கே, அதே ஆண்டில் நடந்த குல்பர்கா நகர பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதைத் தொடர்ந்து 1972-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கார்கேவை தேடி வந்தது. 1972-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை நடந்த 9 சட்டப்பேரவை தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்றார். இதனால் 'தோல்வியை தழுவாத சர்தார்' என கொண்டாடப்பட்டார்.

கார்கேவுக்கு 1976-ம் ஆண்டு தேவராஜ் அர்ஸ் தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைத்தது. தொடர்ந்து குண்டுராவ், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, எஸ்.எம்.கிருஷ்ணா, தரம் சிங் ஆகியோரின் அமைச்சரவையிலும் முக்கிய பொறுப்புகளை வகித்தார். கார்கே உள்ளாட்சி அமைச்சராக இருந்த போது லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்தார். நிலமற்ற பட்டியலின, பிற்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு நிலம் வழங்குவதற்காக 400-க்கும் மேற்பட்ட தீர்ப்பாயங்களை அமைத்திருக்கிறார்.

அரசியலில் 60 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த மல்லிகார்ஜூன கார்கே மீது பெரிதாக ஊழல் புகாரும், குற்றப் பின்னணி வழக்குகளும் இல்லை. காந்தி குடும்பத்தின் தீவிர விசுவாசியான இவருக்கு 4 முறை முதல்வர் பதவி கிடைக்காத போதும், ஒருமுறை கூட கட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தது கிடையாது. பாஜக அரசின் அழுத்தங்களுக்கு அஞ்சாமல் மதவாத அரசியல் எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார். அதேநேரம் எளிமையும் நேர்மையும் நிறைந்த பழைய காங்கிரஸாரின் முகம் இருப்பதால் எதிர்க்கட்சியினர் மத்தியிலும் இவருக்கு நல்ல மரியாதை. இதனாலேயே காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

கர்நாடக சட்டசபை தேர்தல்

கர்நாடகாவில் இன்னும் 6 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த மாநிலத்தை சேர்ந்த கார்கேவை தலைவர் ஆக்கினால் காங்கிரஸூக்கு நல்ல பலன் கிடைக்கும். அதேபோல தலித் ஒருவருக்கு தலைவர் பதவி கொடுத்தால் தேசிய அளவிலும் காங்கிரஸூக்கு நிறைய பலன்கள் கிடைக்கும். மல்லிகார்ஜூன கார்கே தென்னிந்தியாவை சேர்ந்தவர் என்பதால் தென் மாநிலங்களில் காங்கிரஸின் செல்வாக்கும் அதிகரிக்கும். மேற்கூறிய இந்த காரணிகள் எல்லாம் 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸூக்கு கைகொடுக்கும் என வியூகம் அமைக்கப்பட்டுள்ளது.

அவரும் தமிழக மற்றும்அண்டை மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் உட்கட்சிபூசலுக்கு நல்ல சமாதானத்தினை ஏற்படுத்தி ஒன்றுபட்டு கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்க அனைவரும் அரும்பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டு உட்கட்சிபூசலுக்கு நல்லதொருமுடிவினை ஏற்படுத்துவார் என்று கட்சியினர் வட்டாரத்தில் பேச்சு நிலவி வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்....



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Oct 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’