/* */

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய தடயம் அழிப்பு

Robbery Case -கொடநாடுஎஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்கில் முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய  தடயம் அழிப்பு
X

கொடநாடு எஸ்டேட் பைல் படம்.

Robbery Case -நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தோழி சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தின் போது, அதாவது ஜெயலலிதா மறைவுக்கு பின், 2017 ஏப்ரல் 24ல், எஸ்டேட்டில் நுழைந்த கொள்ளையர்கள், காவலாளி ஓம்பகதுாரை கொலை செய்து, கொள்ளையில் ஈடுபட்டனர். காவலாளி ஓம்பகதுார் உடல் அங்குள்ள மரத்தில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். இந்த கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சிலர் மர்மமான முறையில் இறந்தனர். ஆனாலும் அ.தி.மு.க., அரசு இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இதனால் பல முக்கிய நபர்கள் மீது இந்த வழக்கில் சந்தேகப்பார்வை படிந்தது. தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தியது. பல பக்க ஆவணங்களை தயாரித்தது. இந்நிலையில் கடந்த, 30ம் தேதி இவ்வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றியதையடுத்து, இவ்வழக்கின், 1,500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நகல், ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி., குழுவில், டி.ஜி.பி., முகமது ஷகில் அக்தர்,ஐ.ஜி., தேன்மொழி, கூடுதல் எஸ்.பி., முருகவேல், டி.எஸ்.பி.,க்கள் அண்ணாதுரை, சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் தனலட்சுமி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டவர்கள் இடம் பெற்று உள்ளனர். இக்குழுவினர் கடந்த 26ம் தேதி கொடநாடு எஸ்டேட்டில், இரண்டு மணி நேரம் ஆய்வு நடத்தினர்.

காவலாளி ஓம்பகதுாரை கொன்று உடலை கட்டி வைத்திருந்த மரம், வெட்டி அகற்றப்பட்டுள்ளது, சி.பி.சி.ஐ.டி., ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் சில பகுதிகளிலும், தடயங்களை அழிக்க முயற்சி நடந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

கொள்ளையர்களின் தாக்குதலில் காயமடைந்து, தற்போது நேபாளத்தில் வசித்து வரும் இன்னொரு காவலாளி கிருஷ்ணதாபாவிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக போலீசார்நேபாளம் செல்ல உள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் உள்ள, 12 பேரிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டிருப்பதால், கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.

ஊட்டியில் மரம் வெட்டப்பட்டது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ''சி.பி.சி.ஐ.டி., போலீசார் கொடநாடு எஸ்டேட் சென்று, அங்கு கொலை, கொள்ளை நடந்த இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ''காவலாளி ஓம்பகதுார் உடலை தலைகீழாக கட்டிவைத்திருந்த மரத்தை வெட்டி, அகற்றி இருப்பது தெரியவந்துள்ளது. அதற்கு பதிலாக புதிதாக மரக்கன்று ஒன்றை எஸ்டேட் நிர்வாகம் நடவு செய்துள்ளது. மரம் வெட்டி அகற்றப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் முக்கிய பிரமுகர்கள் சிலர் மீது சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இந்த வழக்கில் தடயங்கள ்அழிக்கப்பட்டதும், பெரும் சந்தேகத்தை கிளப்பி வருகிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 31 Oct 2022 11:08 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!