/* */

கண்மாய் கரையை சீரமைக்க கோரி விவசாயிகள் முற்றுகை போராட்டம்

கூடலுார் ஒட்டான்குளம் கரையை சீரமைக்க வலியுறுத்தி விவசாயிகள் கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

HIGHLIGHTS

கண்மாய் கரையை சீரமைக்க கோரி  விவசாயிகள் முற்றுகை போராட்டம்
X

கூடலுார் ஒட்டான்குளம் கரையினை சீரமைக்க வலியுறுத்தி கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

கூடலுார் ஒட்டான்குளம் கரை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. விவசாய விளைபொருட்களை கொண்டு வரும் கனரக வாகனங்கள் இதனால் விபத்தில் சிக்கி வருகின்றன. இந்த கரையினை சீரமைத்து, தார்ரோடு அமைத்து தர விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் கூடலுார் முல்லை சாரல் விவசாயிகள் சங்கம், முல்லை பெரியாறு பாசன மற்றும் குடிநீர்பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.அதிகாரிகள் விவசாயிகளுடன் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி கரையினை சீரமைத்து தருவதாக உறுதி கொடுத்ததை தொடர்ந்து, போராட்டம் இன்று மாலை விலக்கிக் கொள்ளப்பட்டது.

Updated On: 6 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...