Begin typing your search above and press return to search.
10 கிலோ கஞ்சா பறிமுதல்: கம்பத்தில் மூன்று பேர் கைது
தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்திச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் கோம்பை ரோட்டில் நாககன்னியம்மன் கோயில் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது கம்பம் ஆர்.ஆர்., நகரை சேர்ந்த லதா, 43, தேவாரம் பேச்சியம்மன் கோயி்ல் தெருவை சேர்ந்த பாலமுருகன், 28, கூடலுார் ஹரிசன் காலனியை சேர்ந்த சுரேஷ், 41 ஆகியோர் மூட்டைகளை துாக்கிக் கொண்டு கேரளாவிற்கு நடந்து சென்றனர்.
அவர்களை பரிசோதனை செய்த எஸ்.ஐ., விஜய்ஆனந்த் அந்த மூட்டைகளில் 10 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தார். விசாரணையில் அவர்கள் கேரளாவிற்கு கஞ்சா கடத்திச் சென்றது தெரியவந்தது. மூவரையும் அவர் கைது செய்தார்.