/* */

போடி மெட்டு அருகே குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டுயானை

போடி மெட்டு அருகே காட்டு யானை தேயிலை தோட்டங்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

HIGHLIGHTS

போடி மெட்டு அருகே குடியிருப்புகளுக்குள்  புகுந்த காட்டுயானை
X

போடி மெட்டு அருகே தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்த காட்டுயானை.

தேனி மாவட்டம், கேரள எல்லையில் உள்ள போடி மெட்டில் இருந்து 6 கி.மீ., தொலைவில் கேரளாவிற்குள் அமைந்துள்ளது தோண்டிமலை கிராமம். இங்கு பெரும்பாலும் தமிழர்களே வசிக்கின்றனர். இங்கு ஏலத்தோட்டங்களும், தேயிலை தோட்டங்களும் அதிகம். அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் இங்கு யானைகளும் அதிகம்.

இப்பகுதியில் தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்த காட்டுயானை, குடியிருப்பு பகுதிகளுக்கும் உலா வந்தது. ரோட்டில் நீண்ட நேரம் நின்றிருந்தது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஒற்றை யானை என்பதால் சற்று ஆக்ரோசம் காட்டும் என யாரும் அருகில் செல்லவில்லை.

வனத்துறையினர் வந்து சாதுர்யமாக யானையின் நடைபாதையை திசை திருப்பி, வனத்திற்குள் அனுப்பி வைத்தனர். சில மணி நேரம் சுற்றித்திரிந்த யானை தோட்டங்களையோ, குடியிருப்புகளையோ சேதப்படுத்தவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 30 Dec 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...