/* */

தேனி மாவட்டத்தில் கலெக்டர், எஸ்.பி., வீதி வீதியாக கொரோனா விழிப்புணர்வு

தேனி மாவட்டத்தில் ஒமிக்ரான் பரவல் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து கலெக்டரும், எஸ்.பி.,யும் வீதி, வீதியாக சென்று கொரோனா விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் கலெக்டர், எஸ்.பி., வீதி வீதியாக கொரோனா விழிப்புணர்வு
X

தேனி மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்து கலெக்டர் முரளீதரன், எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே வீதி, வீதியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தேனி மாவட்டத்தில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து விழிப்புணர்வு பணிகளில் மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் இணைந்து ஈடுபட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஒமிக்ரான் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களிடையே விழிப்புணர்வு போதிய அளவு இல்லை. எவ்வளவு சொல்லியும், மக்கள் முககவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் கூட்டாக இணைந்து விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளது. கலெக்டர் முரளீதரன், எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே இருவரும் இணைந்து கூட்டாக விழிப்புணர்வு பிரசாரம் செய்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம், போலீஸ் நிர்வாகம், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை உட்பட அத்தனை அரசுத்துறைகளும் இணைந்து விழிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தெரு சந்திப்புகளில் தெருவோ விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் அரசுத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.

Updated On: 5 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்