/* */

தேனி மாவட்டத்தில் 10,945 பேருக்கு கொரோனா பூஸ்டர் டோஸ்: கலெக்டர் தகவல்

தேனி மாவட்டத்தில் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கியது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் 10,945 பேருக்கு கொரோனா பூஸ்டர் டோஸ்: கலெக்டர் தகவல்
X

தேவதானப்பட்டியில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியினை கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்டத்தில் இன்று பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணியினை, தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைத்தார். அப்போது, கலெக்டர் முரளீதரன் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 108 பேர் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 5 லட்சத்து 72 ஆயிரத்து 340 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.

மேலும், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் 41 ஆயிரத்து 753 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சுகாதார, மருத்துவ பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட மொத்தம் 10 ஆயிரத்து 945 பேருக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது. இவ்வாறு கூறினார்.

Updated On: 10 Jan 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!