/* */

கொரோனா ஊசி போட்டால் தான் மதுபாட்டில் கட்டுப்பாடு வேண்டாம் : அரசு அறிவுரை

கொரோனா தடுப்பூசி போட்டால் தான் மதுபாட்டில் என யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம் என தமிழக அரசு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

HIGHLIGHTS

கொரோனா ஊசி போட்டால் தான் மதுபாட்டில்  கட்டுப்பாடு வேண்டாம் : அரசு அறிவுரை
X

பைல் படம்

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே மதுபாட்டில் வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு விதிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்ட நிர்வாகங்கள் 100 சதவீத கொரோனா தடுப்பூசி என்ற இலக்கினை எட்டும் நோக்கில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில் வழங்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்திருந்தன.

இதனால் குடிமகன்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் டாஸ்மாக் கடையினை தவிர்த்து பிளாக் மார்க்கெட்டில் பாட்டில் வாங்கி குடிக்க தொடங்கினர்.

கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மாவட்டங்களில் அனுமதியி்ன்றி பாட்டில் விற்பனை செய்யப்படுவது அதிகரித்தது. இதனால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும் என கருதிய அரசு இந்த கட்டுப்பாடுகளை உடனடியாக தளர்த்தியது.

கொரோனா தடுப்பூசி எவ்வளவு முக்கியம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். மக்கள் தாங்களாக முன்வந்து போடுபவர்கள் போட்டுக்கொள்ளட்டும் மற்றவர்களை கட்டாயப்படுத்தாமல், விழிப்புணர்வு மூலம் நுாறு சதவீத இலக்கினை எட்டுவோம் என தமிழக அரசு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

Updated On: 8 Oct 2021 6:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...