/* */

தஞ்சையில் லாரியில் மணல் கடத்திய இருவர் கைது

தஞ்சை வடக்கு வாசலில், லாரியில் மணல் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

தஞ்சையில் லாரியில் மணல் கடத்திய இருவர் கைது
X

தஞ்சை வடக்கு வாசலில், மேற்கு போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை வழிமறித்து, நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மணல் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, லாரியை ஓட்டி வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நடுக்காவேரி சேர்ந்த மனுநீதி சோழன் (வயது23), ராஜேந்திர ஆற்காட்டை சேர்ந்த ரகு (21) என்பதும், லாரியில் திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மணல் கடத்திய மனுநீதி சோழன், ரகு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 11 Dec 2021 8:36 AM GMT

Related News