Begin typing your search above and press return to search.
தஞ்சையில் குருத்தோலை ஞாயிறு பவனி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
தஞ்சையில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் திரளான கிருஸ்த்துவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியபடி ஓசானா பாடி சென்றனர்.
HIGHLIGHTS
கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த சாம்பல் புதன் கிழமை உடன் தொடங்கி 40 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. இது கடைசி வாரம் பெரிய வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.
பெரிய வாரத்தில் தொடக்கமாக இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் வியாகுல மாதா ஆலயத்தில் மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் குருத்தோலைகளை புனிதம் செய்ததும், ஊர்வலம் புறப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி இயேசு கிறிஸ்துவின் ஜெருசலம் பயணத்தை நினைவு கூறும் வகையில் ஓசானா பாடல்களை பாடியபடி சென்றனர்.
குருத்தோலை பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று திரு இருதய பேராலயத்தை அடைந்ததும் அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.