Begin typing your search above and press return to search.
பாலியல் புகாரில் சிக்கிய அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்
பாலியல் புகாரில் சிக்கிய அ.தி.மு.க., பிரமுகர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
HIGHLIGHTS
தஞ்சாவூர் அருகே மாரியம்மன்கோவிலைச் சேர்ந்தவர் வேல்முருகன்,38,. இவர் தனது மகளுடன் பத்தாவது படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது தொடர்பாக அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக்கு களங்கும் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவர் வேல்முருகன் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.