Begin typing your search above and press return to search.
கபிஸ்தலத்தில் மணல் கடத்திய வாலிபர் கைது
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தில் மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி மேற்பார்வையில், கபிஸ்தலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்கமல், முருகேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கபிஸ்தலம் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நாயக்கர்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்த சரக்கு ஆட்டோவை போலீசார் வழிமறித்தனர். இதில், சரக்கு ஆட்டோவில் இருந்து 4 பேரில் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட இளங்கார்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ரவி மகன் பிரபன்பாபு (29) என்பவரை போலீசார் கைது செய்து சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.