கும்பகோணம் பகுதி சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா
கும்பகோணம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழாவில், பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
HIGHLIGHTS
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கும்பகோணம் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகமும் ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது.
ஆண்டுதோறும் மார்காழி மாத திருவாதிரை அன்று, ஊடல் உற்சவமாகவும், ஆருத்ரா தரிசனமாகவும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் நேற்றுமுன்தினம் இரவு திருவாதிரை மகா அபிஷேகமும், காலை ஆருத்ரா தரிசனக் காட்சியும், பின்னர் இந்திர விமானத்தில் நடராஜப் பெருமான் இரட்டை வீதி உலாவும் நடைபெற்றது.
அதேபோல் நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர்கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில், கவுதமேஸ்வரர் கோயில், கம்பட்டவிஸ்வநாதர் கோயில், பாணபுரீஸ்வரர் கோயில், காளகஸ்தீஸ்வரர் கோயில், கோடீஸ்வரசுவாமி கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும் ஆருத்ரா தரிசன சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.