/* */

தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம்

தென்காசி மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை நேரடியாக விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறும் என ஆட்சியர் அறிவிப்பு.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம்
X

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர ராஜ்

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் 2021 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேரடி கூட்டமாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வருகின்ற 29.10.2021 அன்று காலை10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து நடைபெறவுள்ளது.

எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடைய மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 Oct 2021 6:36 AM GMT

Related News